articles

img

பெண் போகப் பொருளும் அல்ல, கருணை காட்ட வேண்டிய பொருளும் அல்ல உ.வாசுகி

    பெண் போகப் பொருளும் அல்ல, கருணை காட்ட வேண்டிய பொருளும் அல்ல.. பெண் மனித குலத்தின் ஒரு பகுதி..பெண்ணுரிமை என்பது மனித உரிமைக்குள் அடங்கும்.

    பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான அளவு வன்முறையை சந்திப்பதில்லை. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் அதாவது ஏழை பெண்கள் அதிகம் வன்முறையை சந்திக்கிறார்கள். அதேபோல் தலித் பெண்கள் மற்ற வன்முறையோடு சேர்த்து சாதிய வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சாதி வர்க்கம் பாலினம் என்று அனைத்து மட்டங்களிலும் தலித் பெண்கள் ஒடுக்கு முறையை சந்திக்க வேண்டி இருக்கிறது. பழங்குடியின பெண்களும் பொருளாதார சமூக பின் தங்கிய நிலை காரணமாக கூடுதல் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். மதவெறி சித்தாந்தத்தை கொண்ட ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக ஆட்சியின் கீழ் சிறுபான்மை பெண்கள் வெறுப்பு அரசியலையும் நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. திருநர் சமூகத்தினர், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றவர்களை விட வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கும் இடத்தில் உள்ளனர்.

   கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனிடமிருந்து பிரிந்து வாழ்பவர்கள் அனைவரும் தனித்து வாழும் பெண்களாக கருதப்படுகிறார்கள். சமூகத்தில் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மிக அதிகம். பண்பாட்டு ரீதியாக, சடங்கு சம்பிரதாயம் என்கிற பெயரில் அதிகம் பாகுபடுத்தபடுபவர்கள் இவர்கள்.அவதூறுகளையும் பாலியல் தொல்லைகளையும் கூடுதலாக சந்திக்கும் நிலையில் இவர்கள் உள்ளனர்.

    பெண் தொழிலாளிகள் பெண் மற்றும் தொழிலாளி என்கிற இரண்டு தளங்களில் இரட்டை ஒடுக்கு முறைக்கு இலக்கு ஆகிறார்கள்.பெண்ணை தொழிலாளியாக விவசாயியாக அங்கீகரிப்பதற்கே சமூகத்தில் பல தயக்கங்கள் உண்டு. 

    ஒரு சாதியின் பெருமை அதன் தூய்மையோடு இணைத்து பார்க்கப்படுகிறது. தூய்மை என்பதுபெண் அதே சாதியில் திருமணம் (அகமண முறை) செய்து வாரிசை பெற்றுக் கொடுத்து குலப்பெருமையைப் பாதுகாப்பது என்ற பொருளில் வருகிறது. பல நேரங்களில் தலித் இளைஞனை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு பெற்றோரின் கையில் சாவுதான் காத்திருக்கிறது. பல தருணங்களில் அந்த இளைஞனும் கொல்லப்படுகிறான். மொத்தத்தில் இந்தியன் பீனல்கோடை விட  சமூக பீனல் கோடே தூக்கலாக உள்ளது

   குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறை குற்றமாக கருதப்பட வேண்டும், கணவன் மற்றும் அவரது வீட்டார் இழைக்கிற கொடுமைகள் அந்த குடும்பத்தின் சொந்த பிரச்சினை அல்ல, கிரிமினல் குற்றம்

   வீட்டுக்குள் நடந்தாலும் குற்றம் குற்றமே என்கிற புரிதல் உருவானது. உடல் ரீதியான வன்முறை, வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறை, பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை என்கிற நான்கு கோணங்களில் குடும்ப வன்முறை வரையறை செய்யப்பட்டுள்ளது.

   ஆண் பெண் என்பது பாலினம். பாலினத்தின் மீது ஆண்மை பெண்மை என்கிற கற்பிதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. வீரம் துணிச்சல் உள்ளிட்ட குணாம்சங்கள் ஆணுக்கு உரியதாகவும், அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு பெண்ணுக்கு உரியதாகவும் பழங்காலத்தில் கட்டமைக்கப்பட்டது எனினும், அதனுடைய மிச்சசொச்சங்கள், பிற்போக்கு எதிர்பார்ப்புகள் நவீன சமூகத்திலும் நிலவி வருகின்றன.நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் என்றார் பாரதி. குணங்கள் அனைத்தும் மனித குணங்கள்தான். வெட்கப்பட வேண்டியதற்கு அல்லது கோபப்பட வேண்டியதற்கு யாராக இருந்தாலும் பட்டுத்தான் ஆக வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அந்த குணம் அவர்களுக்குள் நிச்சயமாக இருக்கும். ஆனால் ஆணும் பெண்ணும் வெவ்வேறு மாதிரி குணங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என ஆணாதிக்க சமூகம் கட்டமைக்கிறது

    பெண் விடுதலைக்கு முன்நிபந்தனை பொருளாதார விடுதலை.உயர்கல்வியும் வேலை வாய்ப்பும் பெண்கள் உட்பட அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பொதுத்துறை தனியார் மயமாக்கல், நிரந்தர பணிகள் வெளி முகமை பணிகளாக ஒப்பந்த பணிகளாக மாற்றப்படுதல் போன்றவை நிரந்தர வேலை வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம் கல்வி நிலையங்களில் இருந்து கணிசமாக பட்டியலின பழங்குடியின பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. மாணவிகளும் இதற்குள் அடங்குவர். உழைப்பு படையில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையை உருவாக்குகிற கொள்கைகளை எதிர்த்து போராடுவது, பெண்ணுரிமையை பாதுகாப்பதுடன் இணைந்தது.

    பெண்ணுரிமை பாதுகாக்கப்படுவதற்கு பல முனைகளில் முயற்சிகள் தேவைப்படுகின்றன. அரசாங்கம் எடுக்க வேண்டிய முயற்சிகள், சமூகத்தினுடைய பங்களிப்பு, பண்பாட்டுத் துறையில் மாற்றம், பாடத்திட்டங்களில் மாற்றம், ஊடக சித்தரிப்புகளில் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண்ணுரிமை பாதுகாப்பிற்காக ஒரு வலுவான பிரச்சாரத்தை மாநில அரசு கையில் எடுக்க வேண்டும். நமது குடும்பங்களில் அதற்கான முயற்சிகளை நாம் துவங்க வேண்டும்.

      பெண்ணுரிமை பாதுகாக்கப்படுவதற்கு பல முனைகளில் முயற்சிகள் தேவைப்படுகின்றன. அரசாங்கம் எடுக்க வேண்டிய முயற்சிகள், சமூகத்தினுடைய பங்களிப்பு, பண்பாட்டுத் துறையில் மாற்றம், பாடத்திட்டங்களில் மாற்றம், ஊடக சித்தரிப்புகளில் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண்ணுரிமை பாதுகாப்பிற்காக ஒரு வலுவான பிரச்சாரத்தை மாநில அரசு கையில் எடுக்க வேண்டும். நமது குடும்பங்களில் அதற்கான முயற்சிகளை நாம் துவங்க வேண்டும்.

     ஆர்எஸ்எஸ் சித்தாந்தமான இந்துத்துவத்தில் மதவெறி மட்டுமல்ல… சாதி வெறி, ஆணாதிக்கம் போன்றவையும் ஆபத்தான கலவையாக இடம் பெற்றுள்ளன.

    எந்த சாதியில் பிறந்திருந்தாலும் பெண்கள் சூத்திரர்களுக்கு  சமமானவர்கள் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. மனுவின் கோட்பாடு சட்டமானால் பெண்கள்,  தலித் மக்கள் நிலை பெருமளவு பின்னடைவை சந்திக்கும். 

    தலித் பெண் ஊராட்சி தலைவர்கள் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். தேசிய கொடி ஏற்றும் உரிமை கூட இன்னும் பல இடங்களில் பிரச்சனையாகவே நீடிக்கிறது. சுயேச்சையாக செயல்பட முடியாமல் சாதி ஆதிக்க சக்திகள் சொல்வதை செய்கிற கட்டாயத்திற்கு பலர் தள்ளப்படுகிறார்கள். கடந்த காலத்தில் இதர சாதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாற்காலியில் அமர, தலித் பெண் ஊராட்சிமன்ற தலைவர் தரையில் அமரும் அவலம் ஒரு சில இடங்களில் நிலவியது. சில ஊராட்சிகளில் 100 நாள் வேலையில் கூட பாகுபாடு பிரதிபலிக்கிறது.

     பொதுவாகவே பெண் ஊராட்சி தலைவர்கள் சுயமாக செயல்படக்கூடிய சூழல் இல்லை. கணவர், மாமனார், சகோதரன் என குடும்ப உறுப்பினர்களால் இயக்கப்படுகிறார்.சில சமயம் கூட்டங்களிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலருக்கு பதிலாக அவரது கணவர் வந்து அமர்வதும் உத்தரவிடுவதும் நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

    பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் வாய் நிறைய பேசுகிறார். ஆனால் உண்மை என்ன? பெண்கள் குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை தொடுப்பவர்களாக பல்வேறு மட்டங்களில் பாஜக ஊழியர்களே உள்ளனர் என்பதை ஊடக செய்திகளின் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்பாக பாஜகவும், அவர்களது ஒன்றிய மாநில அரசுகளும் செய்கின்றன.

    2021ல் மிக அதிகமான சிசுக்கொலை நடந்த மாநிலமாக தமிழகம் தேசிய குற்ற பதிவு ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்கள் 2020ஐ விட 2021ல் 39.8 சதவீதம் அதிகம். 2021ல் 4465 போக்சோவழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 3433 பாலியல் வல்லுறவு வழக்குகள் ஆகும் இதில் 3435 சிறுமிகளும் 34 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 10 வல்லுறவு வழக்குகள் போக்சோவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

   2021ல் மிக அதிகமான சிசுக்கொலை நடந்த மாநிலமாக தமிழகம் தேசிய குற்ற பதிவு ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்கள் 2020ஐ விட 2021ல் 39.8 சதவீதம் அதிகம். 2021ல் 4465 போக்சோவழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 3433 பாலியல் வல்லுறவு வழக்குகள் ஆகும் இதில் 3435 சிறுமிகளும் 34 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 10 வல்லுறவு வழக்குகள் போக்சோவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.